Works

பவளவிழா ஆண்டை முன்னிட்டு பாடசாலை மைதானத்தை சூழ மரக்கன்றுகள் நடப்பட்டமை

எமது பழைய மாணவர் சங்க உறுப்பினர் திரு வவானந்தன் அவர்களுக்கு மீண்டுமொருமுறை நன்றி கூறுகின்றோம். 2027 பவளவிழா ஆண்டை நோக்கி பாடசாலையை அழகு படுத்தல் எண்ணக் கருவின் கீழ் திரு வவானந்தன் ஆறுமுகம் அவர்கள் 243000/= செலவில் பாடசாலை மைதானத்தைச் சூழ 100 Palm Tree களையும், மேலும் 40 புங்கை மரங்களையும் நட்டதுடன், அதற்கான நீர் விநியோக வசதியையும், பராமரிப்பாளருக்கான தற்காலிக சம்பளத்தையும் செய்து கொடுத்துள்ளார். இவருக்கு பாடசாலை மற்றும் பிரித்தானிய பழைய மாணவர் சங்கம் […]
Read more

வெற்றி கிண்ணத்தைப் பெற்றுக்கொண்ட விசேட கல்வி மாணவர்கள்

விசேட கல்வி பாடசாலைகளுக்கு இடையிலான வலயமட்ட விளையாட்டுப் போட்டி வலயக் கல்விப் பணிப்பாளரின் தலைமையில் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் அனைத்து பாடசாலைகளையும் வென்று எமது பாடசாலை விசேட கல்வி மாணவர்கள் முதலாம் இடத்தை பெற்று( சம்பியன் ) பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இம்மாணவர்களைப் பாராட்டுவதுடன் நீண்ட காலமாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வெற்றிக்கு வழிகாட்டிய கடினமான பணியை மேற்கொண்ட எமது விசேட கல்வி ஆசிரியர்களான திருமதி பிரேமினி இரத்தினகாந்தன், திருமதி லக்ஷனா மதன்ராஜ் ஆகியோர்களை […]
Read more

தேசியமட்ட சாதனையாளர் செல்வி மோகன் பவதாரணி அவர்களின் கௌரவிப்பு நிகழ்வு

10.09.2025 அன்று எமது பாடசாலையில் தேசியமட்ட சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு சிறப்பாகவும் எளிமையாகவும் நடைபெற்றது. இதில் தேசிய மட்ட இசைப் போட்டியில் முதலாம் இடம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த செல்வி மோகன் பவதாரணி அவர்களையும், இவரை வழி நடத்திய எமது இசை ஆசிரியை திருமதி ஜனார்த்தனி பிரபாகரன் அவர்களையும் பாடசாலைச் சமூகம் மனப்பூர்வமாக கௌரவித்தது. இந்நிகழ்வில் விருந்தினராக யாழ் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு இரத்தினராசா கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வை சிறப்பாக செய்து […]
Read more

பசுமை நிறைந்த நினைவுகளின் கதம்பம் 2025 நிகழ்விற்கான கலந்துரையாடல்

எமது பாடசாலை இலண்டன் பழைய மாணவர் சங்கத்தின் 11 ஆவது பசுமை நிறைந்த நினைவுகளின் கதம்பம் 2025 நிகழ்விற்கான கலந்துரையாடல் 06.09.2025 அன்று எமது சங்க உறுப்பினர் திருமதி ரமணலதா யோகநாதன் அவர்களது இல்லத்தில் Sutton எனும் இடத்தில் நடைபெற்றது. இதில் எமது நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் விழா சம்பந்தமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு அதன் சில பொறுப்புக்களும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. கலந்துரையாடல் மிக சிறப்பாக நடைபெற தமது வீட்டில் ஒத்துழைப்பு வழங்கி இராப்போசனத்தையும் எமக்களித்த […]
Read more

ஆசிரியை திருமதி. செல்வரஞ்சினி சிவசக்திவேல் அவர்களுக்கு நன்றிகள்

எமது பாடசாலையின் தரம் இரண்டு வகுப்பு ஆசிரியை திருமதி செல்வரஞ்சினி சிவசக்திவேல் அவர்கள் பாடசாலையின் தேவையை தானாக உணர்ந்து அண்மையில் காலமான தனது தந்தையார் அம்பலவாணர் கந்தசாமி அவர்களின் நினைவாக ஆரம்பக் கல்வி மாணவர்களின் பயன்பாட்டிற்காக 18540/= பெறுமதியான professional party speaker ஒன்றை பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்துள்ளார். அத்துடன் எமது பாடசாலையில் இருந்த பழுதடைந்த ஒலிபெருக்கி சாதனம் ஒன்றையும் தனது செலவில் திருத்தம் செய்து கொடுத்துள்ளார். இவருக்கு பாடசாலை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Read more

தேசிய கலை இலக்கிய விருது பெறும் மாணவி செல்வி மோ பவதாரணி

தேசிய கலை இலக்கிய போட்டியில் இந்த வருடம் பாடல் நயத்தல் பிரிவில் எமது பாடசாலை மாணவி செல்வி மோ பவதாரணி தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய கலை இலக்கிய விருதைப் பெற தகுதி பெற்றுள்ளார். இம்மாணவியை பாடசாலை சார்பாக பாராட்டுவதுடன் தனது கடின உழைப்பால் இம்மாணவி தேசிய விருதை பெற்றுக் கொள்ள வழிகாட்டிய இசை ஆசிரியர் திருமதி. ஜனார்த்தனி பிரபாகரன் அவர்களையும் அதற்கு உறுதுணையாகவிருந்த ஆசிரியர் நிலானி பரநிரூபன் அவர்களையும் பாராட்டுவதுடன் பாடசாலைச் சமூகம் […]
Read more

பிரதேச மட்டத்தில் நடைபெற்ற பாடல் நயத்தல் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள்

தேசிய கலை இலக்கியப் போட்டிக்காக பிரதேச மட்டத்தில் நடைபெற்ற பாடல் நயத்தல் போட்டியில் எமது பாடசாலையைச் சேர்ந்த செல்வி மோ.பவதாரணி முதலாம் இடத்தையும் செல்வன் த.ஜானுசன் இரண்டாம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். பாலர் பிரிவு கதை சொல்லுதல் போட்டியில் செல்வி ப. அத்விகா மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.இம் மாணவர்களை பாடசாலை சார்பாக பாராட்டுவதுடன் இவர்களை வழி நடத்திய இசை ஆசிரியர்களான திருமதி. ஜனார்த்தனி பிரபாகரன், செல்வி. சுதர்சினி வல்லிபுரம், வகுப்பாசிரியரான திருமதி. செல்வரஞ்சனி . […]
Read more

சிதம்பரா கணிதப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவன்

08.03.2025 உலகளாவிய ரீதியில் நடைபெற்ற சிதம்பரா கணிதப் போட்டியில் எமது பாடசாலையில் கல்வி கற்கும் தரம் 5 மாணவன் இ.கபீஷன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டு வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார். பாடசாலைக்கு பெருமை சேர்த்த இம் மாணவனை பாராட்டுவதுடன் இவருக்கு வழி காட்டிய வகுப்பு ஆசிரியர் திருமதி. கௌசலா ராஜ்குமார், ஆசிரியர் திரு.மூ. பாலேந்திரன் ஆகியோர்களுக்கு பாடசாலை சார்பாக நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Read more

நாடகப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்

உலக சுற்றாடல் தினம் தொடர்பாக நடாத்தப்பட்ட நாடகப் போட்டியில் வெற்றி பெற்ற எமது பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா 19.08.2025 அன்று திருநெல்வேலி விவசாயத் திணைக் களத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பரிசுகளைப் பெற்ற எமது மாணவர்களையும் பொறுப்பாசிரியர் திரு. மு. ஐங்கரன் அவர்களையும் பாடசாலை சார்பாக வாழ்த்துகிறோம்.
Read more

இலங்கை பாராளுமன்ற அமர்வுகளை காண்பதற்காக சென்ற மாணவர்கள்

யாழ்ப்பாண வலய மாணவர் பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இலங்கை பாராளுமன்ற அமர்வுகளை தரிசிப்பதற்காக கடந்த வாரம் சென்றிருந்தனர். இதில் எமது பாடசாலையைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவிகளான செல்வி. பிரதீபன் அபிநயா, செல்வி. கஜேந்திரன் சங்கீர்த்தனா ஆகியோரும் பங்கு பற்றி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்களை வழி நடத்திய எமது மாணவர் பாராளுமன்ற பொறுப்பு ஆசிரியர்களான திரு. ந. விஜயகுமார், திரு. வீ. விஜயகுமார் ஆகியோர்களுக்கு பாடசாலை சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
Read more

No products in the cart.