எமது பாடசாலையிலிருந்து 2017 ஆம் ஆண்டு முதன் முறையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவிகள் லண்டன் பழைய மாணவர் சங்கத்தினரால் இன்று (2.2.2018)பணப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.எம்மால் மாணவர்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட பரிசினை எமது பாடசாலையின் பழைய மாணவரும் சுவிஸ் பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமான திரு சு.நடராஜலிங்கம் அவர்கள் வழங்கிக் கௌரவித்தார்.எமது பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவர்களை மீண்டுமொரு தடவை பாராட்டி வாழ்த்துகின்றோம்.





